Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ISPL சென்னையின் இணை உரிமையாளரான அணியில் என்னுடன் சேருங்கள் - நடிகர் சூர்யா அழைப்பு!

02:56 PM Jan 09, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கில் சென்னையின் இணை உரிமையாளரான அணியில் என்னுடன் சேருங்கள் என நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

சமீப காலமாகவே, ஐஎஸ்பிஎல் டி10 தொடர்களும் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகின்றன. இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியம் லீக் என்று அழைக்கப்படும் இந்த தொடர் தற்போது இந்தியாவிலும் வரும் மார்ச் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தத் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கியுள்ளனர்.

அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும், ஹைதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கி உள்ளனர். கொல்கத்தா அணியை சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர் கான் வாங்கியுள்ளனர். இந்த வரிசையில், லீக் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா சொந்தமாக விலைக்கு வாங்கியதாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் தெரிவித்தார்.

சூர்யாவின் இந்த புது அவதாரத்திற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஒன்றாக பயணத்தை தொடங்குவோம். இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கில் சென்னையின் இணை உரிமையாளரான அணியில் என்னுடன் சேருங்கள்.” என பதிவிட்டு அதற்கான லிங்க்கையும் பதிவிட்டுள்ளார்.

Tags :
akshay kumarAmitabh BachchanChennaiCricket LeagueIndian Street Premium LeagueISPLKrithik RoshanNews7Tamilnews7TamilUpdatesRam charanSuriya
Advertisement
Next Article