ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு புற்றுநோய் | சிகிச்சைக்காக நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு...
பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு, குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸின் நிறுவனரான நரேஷ் கோயல், 1.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் 16-வது பணக்காரராக அறிவிக்கப்பட்டார். அப்போது இந்திய விமானப் போக்குவரத்து துறையே இவருடைய கட்டுப்பாட்டில் தான் இருந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நரேஷ் கோயல் சிறையில் உள்ளார். பணமோசடி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்க இயக்குநரகம் அவரைக் கைது செய்து மும்பை சிறையில் அடைத்துள்ளது. கனரா வங்கி அளித்த புகாரின் பேரில் ED விசாரணையை தொடங்கி நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், 74 வயதான மும்பையின் ஆர்தர் சாலையில் சிறையிலிருந்து தனது நோய்வாய்ப்பட்ட மனைவியைச் சந்திக்க வெளியே வந்தார். இப்போது அவரைப் பலர் புகைப்படம் எடுத்தனர். ஒரு காலத்தில் காஸ்ட்லியான கோட் , சூட் உடன் வலம் வந்த நரேஷ் கோயல், சிறையில் இருந்து வெளியே வந்த போது வெள்ளை குர்தா மற்றும் பைஜாமா அணிந்து, வெட்டப்படாத தாடி மற்றும் சோர்வாகத் தோன்றும் கண்களுடன் வந்தார். சிறையில் இருந்து நரேஷ் கோயல் வெளியான போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் டிரெண்டானது.
இந்நிலையில், நரேஷ் கோயல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியுள்ளார்.
மருத்துவ பதிவுகளின்படி, நரேஷ் கோயலுக்கு குடலில் சிறிய கட்டிகள் உள்ளன, அவை 'நியூரோஎண்டோகிரைன் கட்டிகள்' என்று அழைக்கப்படுகின்றன. இது மெதுவாக வளரும் புற்றுநோய். நரேஷ் கோயலுக்கு கடுமையான ரிஃப்ளக்ஸ் உணவுக்குழாய் அழற்சியுடன் 35 செமீ முதல் 40 செமீ வரையிலான இடைவெளி குடலிறக்கமும் உள்ளது. நரேஷ் கோயலுக்கு நீண்ட நாட்கள் மருந்து சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆசிட் ரிஃப்ளக்ஸை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய இயலும்.
அவருக்கு PET ஸ்கேன் எடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் அறுவை சிகிச்சை, கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சையின் திசையை மருத்துவர் தீர்மானிக்க முடியும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. ஜேஜே மருத்துவமனையின் மருத்துவ வாரியத்தை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் சுனில் கோன்சால்வ்ஸ் தெரிவித்தார். பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை தனது தெளிவான கருத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, ஆனால் மருத்துவ வாரியம் விரைவில் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், அமலாக்கத்துறை கோரியபடி மருத்துவக் குழுவை அமைத்து நரேஷ் கோயலிடம் முழுமையான விசாரணை நடத்துமாறு ஜேஜே மருத்துவமனை டீனிடம் கேட்டுக் கொள்ளப்படுவதாகக் கூறியது.
நரேஷ் கோயலின் மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் ஜேஜே மருத்துவமனையில் முன்மொழியப்பட்ட சிகிச்சை கிடைக்குமா என்று வாரியம் நோயைக் கண்டறிந்து தெரிவிக்கும் என்று நீதிமன்றம் கூறியது.