Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"திரும்பவும் பிரியாணி பக்கெட் எடுக்க நேரம் வந்திடுச்சு" - கைதி 2 அப்டேட் கொடுத்த கார்த்தி!

03:11 PM Jul 10, 2024 IST | Web Editor
Advertisement

கைதி 2 திரைப்படம் குறித்த அப்டேட்டை சொல்லி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் நடிகர் கார்த்தி.

Advertisement

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான திரைப்படம் கைதி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பெரிதளவு பேசப்பட்டது. இப்படத்திற்கு பிறகே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிரபலமடைந்தார். இதன் பிறகு மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்தார். தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கிடையே நடிகர் கார்த்தியின் 47-வது பிறந்தநாள் கடந்த மே மாதம் கொண்டாடப்பட்டது. அப்போது கார்த்தியின் ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர். அவர்கள் செய்த உதவியை ஊக்குவிக்கும் விதமாக ரசிகர்களை நேரில் அழைத்து விருந்து வைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது ரசிகரிகளிடம் பேசிய நடிகர் கார்த்தி, "இரண்டு படங்கள் முடிந்துவிட்டன. அந்த இரண்டு படங்களுமே ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும். அது மட்டுமில்லாம் சர்தார் 2 ஆரம்பிக்க போகிறோம், அடுத்த வருஷம் லோகேஷ் வர சொல்லி இருக்கிறார்.  திரும்பவும் பிரியாணி பக்கெட்டை எடுக்க வேண்டும்" என்றார்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கைதி 2 திரைப்படத்தின் அப்டேட்டை நடிகர் கார்த்தி கொடுத்துள்ளார். இதன்மூலம் கூலி திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் லேகேஷ் கனகராஜ் கைதி 2 திரைப்பட பணிகளில் ஈடுபடுவார் என தெரிகிறது.

Tags :
briyaniCoolieKaithiKaithi 2Kaithi2UpdateKarthiLokesh Kanagarajmovie update
Advertisement
Next Article