Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"என் படம் தியேட்டரில் ரிலீஸாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது"… மேடையில் எமோசனல் ஆன #Suriya!

10:35 AM Oct 25, 2024 IST | Web Editor
Advertisement

கடந்த இரு ஆண்டுகளாக தன்னுடைய படங்கள் எதுவும் திரையரங்குகளில் ரிலீசாகாத நிலையில், ரசிகர்களின் அன்பு தன்னை கண்கலங்க செய்துள்ளதாக நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் வரும் நவ. 14-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (அக். 26) சென்னையில் நடைப்பெறவுள்ளது. வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியுள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமான இறங்கியுள்ளன. அந்த வகையில், ஹைதராபாத்தில் படக்குழு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்த நடிகர் சூர்யா பேசும்போட்டு உணர்ச்சிவசப்பட்டார். அப்போது, அவர் பேசியதாவது, "என்னோட படம் தியேட்டரில் ரிலீஸாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் சூர்யா சன் ஆஃப் சத்யமூர்த்தி படம் ரீ-ரிலீஸ் ஆனபோது நீங்கள் அனைவரும் இதே இடத்துல இருந்தீர்கள். உங்களுடைய அன்பை பார்த்து என் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. இவ்வளவு அன்புக்கு நன்றி. இதனை நான் ஒரு ரத்த சொந்தமாக தான் பாக்குறேன். இதனால் உங்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தைக் கொடுக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. அதனால் தான் கங்குவா."

இவ்வாறு நடிகர் சூர்யா பேசினார்.

Tags :
disha pataniKanguvamovienews7 tamilSivaSuriyatamil cinema
Advertisement
Next Article