Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தமிழக கட்சிகளின் தலைமையில் ஆட்சி இருந்தால் நல்லது" - பிரேமலதா விஜயகாந்த்!

எங்கள் கட்சி வளர்ச்சிக்காக முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
12:42 PM Jun 29, 2025 IST | Web Editor
எங்கள் கட்சி வளர்ச்சிக்காக முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Advertisement

கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "கோவையில் கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்வுக்கும், கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நாளை கிருஷ்ணகிரியில் மா வியாபாரிகளுக்கான ஆர்பாட்டம் நடத்தப்பட உள்ளது. சுதீஷ் பங்கேற்ற நிகழ்வுக்கும் கட்சிக்கு தொடர்பு இல்லை. நண்பர் என்ற முறையில் பங்கேற்றுள்ளார். தமிழகம் முழுவம் 8 மண்டலங்களாக பிரித்து தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisement

சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. கடலூரில் ஜனவரி 9 ஆம் தேதி மாநாட்டில் அறிவிக்கப்படும். தேசிய ஜனநாயக தலைமையில் கூட்டணி அமையும் என சொல்லியுள்ளனர். தமிழக கட்சிகளின் தலைமையில் ஆட்சி இருந்தால் நல்லது. கூட்டணி ஆட்சி இருந்தால் வரவேற்கத்தக்கது. எத்தனையோ மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமாகி உள்ளது.

பல்வேறு போதை கலாச்சாரத்தில் தமிழகம் மூழ்கி உள்ளது. நடிகர்கள் 2 பேர் மட்டுமே போதைப்பொருள் பயன்பாடு என்பது தவறு. திமுக ஒன்றிணைந்து செயல்படுவோம் என எடப்பாடி கருத்துக்கு, பொறுத்திருங்கள் என சொல்வேன். கோவையில் சாலை மோசமாக உள்ளது, போர்க்கால அடிப்படையில் சாலை பணிகள் நடத்தப்பட வேண்டும், மேம்பால பணிகளை விரைவுபடுத்த வேண்டும் - திமுக ஆட்சி எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு, விஜய்க்கு அட்வைஸ் செய்யும் வயது அவருக்கு இல்லை, கட்சி என்றால் அழைக்க தான் செய்வார்கள்.

மா விவசாயிகள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நலம் விசாரிப்பது போல் இங்கிருந்து கடிதம், அங்கிருந்து கடிதம் என இருக்கக்கூடாது. அண்டை மாநிலங்கள் போல தமிழக அரசு விவசாயிகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கட்சி வளர்ச்சிக்காக முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
aairportgovernmentkovaiMKStalinPremalatha vijayakanthTamil Nadu partiesTamilNadu
Advertisement
Next Article