Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அடுத்த 3 மணி நேரத்தில் கொட்ட போகும் மழை.! எந்த மாவட்டங்களில் தெரியுமா?

06:53 AM Jul 06, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

Advertisement

கடந்த இரண்டு வாரங்களாகவே தலைநகர் சென்னையில் இரவு நேரங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் ஊரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது.

இந்தநிலையில், சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தெற்கு திசையின் காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று மட்டும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதன்படி, தமிழகத்தின் சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Tn RainsWeather Update
Advertisement
Next Article