“ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் ஒரு பொறுப்பற்ற ஆக்கிரமிப்புச் செயல்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள 200க்கும் மேற்பட்ட ராணுவ மற்றும் அணுசக்தி தளங்களை குறிவைத்து நேற்று(ஜூன்.13) இஸ்ரேல் ஏவுகனை தாக்குதல் தாக்குதல் நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்ததாகவும் 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானின் ஐ.நா. தூதர். மேலும் இதில் அந்நாட்டு ஜெனரல்கள் மற்றும் ஆறு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானும் ஏராளமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிரான . அச்சுறுத்தல் நீங்கும் வரை ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இது இரு நாடுகளிடையே போர் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் ஒரு பொறுப்பற்ற ஆக்கிரமிப்புச் செயல் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் ஒரு பொறுப்பற்ற ஆக்கிரமிப்புச் செயலாகும், இது ஒரு பரந்த போரை தூண்டிவிடும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. காசா மீதான தொடர்ச்சியான குண்டுவீச்சு மற்றும் பாலஸ்தீன குடிமக்களின் துன்பத்துடன் இணைந்து, இந்த வன்முறைப் பாதை கண்டிக்கப்பட வேண்டும். உலகம் கட்டுப்பாடு, நீதி மற்றும் அர்த்தமுள்ள ராஜதந்திரத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இனி வேண்டாம் போர்கள்!”
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.