Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காசாமீது ஒரே இரவில் 2 முறை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்... 54 பேர் பலி!

காசாவில் நேற்று ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
03:39 PM May 26, 2025 IST | Web Editor
காசாவில் நேற்று ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement

இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலுக்கு உள்ளாகி கடும் சேதமடைந்த வடக்கு காசாவின் பெய்ட் லாஹியா நகர மக்கள், நூற்றுக்கும் அதிகமானோர் ஃபஹ்மி அல்-ஜர்காவி பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த பள்ளி மீதான தாக்குதல் உட்பட நேற்று இரவு இரண்டு தனித்தனி வான்வழித் தாக்குதல்களை காசாமீது இஸ்ரேல் நடத்தியுள்ளது.

Advertisement

இந்த தாக்குதல்களில் மொத்தம் 54 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, வடக்கு காசாவில் உள்ள ஜபாலியாவில் ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டதாக அல்-அஹ்லி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஃபடெல் எல்-நைம் தெரிவித்தார்.

இஸ்ரேலின் தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால் இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தாக்குதல்களைத் திட்டமிட, பயங்கரவாதிகளால் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் பகுதிகள் பயன்படுத்தப்படுவதாகவும், ஹமாஸ் “காசா மக்களை கேடயங்களாக” பயன்படுத்துவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. 

Tags :
GazaIsraeli StrikesPalestinianswar
Advertisement
Next Article