Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காஸாவில் உள்ள மசூதி மீது #Israel வான்வழி தாக்குதல்... 26 பேர் பலி... ஓராண்டை கடந்தும் தொடரும் பதற்றம்!

10:47 AM Oct 07, 2024 IST | Web Editor
Advertisement

காசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். மேலும், 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா்.

Advertisement

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்களும், 40,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடைய போர் பூண்டு இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்தது.

இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராகவும், ஹமாஸுக்கு ஆதரவாகவும் அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியது. இதனைத் தொடர்ந்து, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் லெபனான் பொதுமக்கள் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், நேற்று (அக்.6) காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. டெயீா்-அல்-பலா நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய மருத்துவமனைக்கு அருகில் போரால் வீடுகளை இழந்து தஞ்சமடைந்த மக்களுக்கு வசிப்பிடமாக விளங்கிய மசூதி மற்றும் பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். 90-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். இந்த இரு தாக்குதல்களும் கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்தே நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. ஆனால், இதற்கு எந்தவொரு முறையான ஆதாரங்களையும் இஸ்ரேல் வெளியிடவில்லை.

Tags :
news7 tamil
Advertisement
Next Article