Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'உன்னை நினைத்து' 2ம் பாகத்தில் ஹீரோ இவரா? – வெளியான புதிய தகவல்!

08:24 PM Jul 14, 2024 IST | Web Editor
Advertisement

'உன்னை நினைத்து' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாகவும், அதில் சந்தானம் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் இயக்குநர் விக்ரமன் தெரிவித்தார்.

Advertisement

'புதிய பாதை' திரைப்படத்தில் இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் விக்ரமன்.  இதனையடுத்து தொடர்ந்து, 1990ல் வெளியான 'புது வசந்தம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  இந்த படத்தை தொடர்ந்து, 'பெரும்புள்ளி' 'கோகுலம்', 'நான் பேச நினைப்பதெல்லாம்', 'பூவே உனக்காக', 'சூர்ய வம்சம்', 'உன்னை நினைத்து', 'வானத்தைப்போல' உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

இதில் 'பூவே உனக்காக' திரைப்படம் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.  மேலும் சூர்யா நடிப்பில் வெளியான 'உன்னை நினைத்து' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இயக்குனர் விக்ரமன் கடைசியாக 2014ல் 'நினைத்தது யாரோ' என்ற படத்தை இயக்கினார்.

அதன்பிறகு, அவரது மனைவியின் உடல்நலம் சரியில்லாததன் காரணமாக திரைப்படங்களை இயக்காமல் இருந்தார்.  இந்த நிலையில், இயக்குனர் விக்ரமன் 'உன்னை நினைத்து' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகவும், சந்தானம் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பார் என்றும் தெரிவித்தார்.

Tags :
Director VikramanLailamovie updatesanthanamSnehaSuryaUnnai NinaithuUnnai Ninaithu 2
Advertisement
Next Article