Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாளை தொடங்குகிறது IPL கிரிக்கெட் திருவிழா! தீவிர பயிற்சியில் CSK, RCB வீரர்கள்!

11:32 AM Mar 21, 2024 IST | Web Editor
Advertisement

ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூரு அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

17-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதன் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னை – பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த 18 ஆம் தேதி ஆன்லைனில் நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : மட்டன் பிரியாணி ரூ.200! டீ, காபி ரூ.15! – வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும் விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டம் சென்னையில் நடப்பது இது 5-வது முறையாகும். முன்னதாக 2011, 2012, 2019, 2021 ஆம் ஆண்டு சீசனும் சென்னையில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். போட்டிக்காக பயிற்சி செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி 2 வாரத்திற்கு முன்பே சென்னைக்கு வந்து விட்டார். தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், சான்ட்னெர், மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, ரஹானே உள்ளிட்டோர் அணியுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து, பெங்களூரு அணி வீரர்கள் கடந்த 19 ஆம் தேதி இரவு சென்னை வந்து சேர்ந்தனர். அவர்கள் நேற்று முதல் சேப்பாக்கத்தில் வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டம் என்பதால் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

Tags :
ChennaichennaisuperkingsChepaukStadiumCskIPL2024IPL2024ScheduleIPLonJioCinemaIPLonStarIPLTEAMSMSdhoniRCBRoyal Challengers BengaluruViratKoli
Advertisement
Next Article