ஐபிஎல் 2025 - மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி!
ஐபிஎல் போட்டிகள் ப்ளே ஆஃபை நெருங்கிய நிலையில், நேற்று 69வது லீக் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இப்போடியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் மும்பை பேட்டிங் செய்தது.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதன்படி பஞ்சாப் அணிக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சன், வைஷாக் விஜய் குமார் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்ப்ரீத் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப் அணி. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா - பிரம்சிம்ரன் சிங் களமிறங்கிய நிலையில் பிரம்சிம்ரன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த பிரியன்ஷ் ஆர்யா - ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பஞ்சாப் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. ஆர்யா 62 ரன்களிலும், ஜோஷ் இங்கிலிஸ் 73 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பஞ்சாப் 187 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த பஞ்சாப் அணி 19 புள்ளிகளுடன் முதல் அணியாக 2வது இடத்தை உறுதி செய்துள்ளது. மும்பை அணி 4 வது இடம் பிடித்துள்ளது.