Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#INDVsBan | முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு!

09:33 AM Sep 19, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி கேப்டன் ஷன்டோ டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

Advertisement

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷான்டோ பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து, இந்திய அணி பேட்டிங்கில் இறங்கியுள்ளது. முன்னதாக இரு அணி வீரர்களும், தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், பும்ரா, அஸ்வின் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். நஜ்முல் ஹசேன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணியில் முஷ்ஃபிகர் ரஹீம், லிட்டன் தாஸ், ஷகீப் அல் ஹசன் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், 11 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 2 ஆட்டங்கள் சம நிலையில் முடிந்துள்ளன. அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, வங்கதேச அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags :
Chepaukind vs banTest Cricket
Advertisement
Next Article