இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
நமது திராவிட மாடல் அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
12:16 PM Sep 25, 2025 IST
|
Web Editor
Advertisement
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தஞ்சை - புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்த பாக் வளைகுடாவில், நமது திராவிட மாடல் அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்!
Advertisement
இந்த முன்னோடி முயற்சியைப் பாராட்டும் தீர்மானம், அபு தாபி #IUCNWorldConservationCongress2025-க்கு முன் ஆன்லைன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.
இந்த முயற்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வனத்துறை ஓம்கார் பவுண்டேஷன் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Article