Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முதல் போட்டியில் வங்கதேசத்தை துவம்சம் செய்த இந்தியா - ஷமி அபாரம்.., கில் அசத்தல்!

ஐசிசி சாம்பியன்ஸ் தொடரின் வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் இந்திய அணி 6விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
10:03 PM Feb 20, 2025 IST | Web Editor
Advertisement

8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. கராச்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.

Advertisement

 இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற 2வது போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டது.

இதன்படி போட்டியின் தொடக்கத்தில் டாஸ் போடப்பட்டது. டாஸை வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக தன்சித் ஹசனும் சௌமியா சர்காரும் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய இந்திய நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது ஷமி தனது 6வது பந்தில் சர்காரின் விக்கெட்டை வீழ்த்தி வங்கதேச அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹுசைனும் 2பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஹர்ஷித் ராணாவில் பந்தில் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து 6வது ஓவரை வீசிய ஷமியின் பந்தில் 5 ரன்களை மட்டுமே எடுத்து மிராஜ் ஆட்டமிழந்தார். வங்கதேச அணி 9ஓவர்களின் முடிவில் 40க்கும் குறைவாக ரன்களை மட்டுமே எடுத்து 5விக்கெட்களை பறிகொடுத்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தவ்ஹீத் ஹிர்தாய் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டு சதம் விளாசி அசத்தினார். இதேபோல அடுத்தடுத்த வந்த ஜாகேர் அலியும் 68ரன்கள் எடுத்து அணிக்கு பக்கபலம் சேர்த்தார். இறுதியாக 49.4 ஓவரில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 228ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு 229ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் துவக்கத்திலேயே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய அணியின் கேப்டன் ரோஹித் 41ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து கில்லுடம் ஜோடி சேர்ந்த விராட் கோலி 22 ரன்களுக்கும், ஸ்ரேயஷ் ஐயர் 15ரன்களுக்கும், அக்சர் படேல் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

சுப்மன் கில்லின் நிதானமான மற்றும் அதிரடியான ஆட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக கே.எல்.ராகுல் பார்ட்னர்ஷிப்பில் இணைந்து இருவரும் ரன் எண்ணிக்கையை அதிகரித்தனர். இறுதியாக இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் 46.3ஓவர்களில் வங்க தேசத்தை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதம் விளாசிய சுப்மன் கில் 101ரன்களுடனும் , கே.எல்.ராகுல் 41ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்திய அணியில் முகமது ஷமியின் அசத்தல் பந்துவீச்சில் வங்கதேச அணியின் 5விக்கெட்கள் சரிந்தன. இதன்மூல ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்களை வீழ்த்தி முகமது ஷமி சாதனை படைத்தார். இதேபோல ஹர்ஷித் ராணா 3விக்கெட்களும் அக்சர் படேல் அடுத்தடுத்து 2 விக்கெட்களையும் எடுத்து அசத்தினர்.

Tags :
BangladeshICC Champion Trophyind vs banIndia
Advertisement
Next Article