Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இன்று ஆஸி. அணியுடன் 4வது டி20 போட்டி - தொடரை கைப்பற்றுமா இந்தியா?

08:57 AM Dec 01, 2023 IST | Web Editor
Advertisement

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெற உள்ளது.

Advertisement

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

ஆனால் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெற்ற 3வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இருப்பினும், தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டி20 ஆட்டம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி களம் காண உள்ளது. மேலும், முதல் 3 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் இந்த போட்டியில் மீண்டும் களம் இறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுவது 30வது சர்வதேச டி20 போட்டியாகும். இதுவரை நடைபெற்ற 29 ஆட்டங்களில் இந்தியா 17 ஆட்டங்களிலும், ஆஸ்திரேலியா 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags :
AustraliaBCCIIndiaIndianCricketTeamIndiaVsAustraliaSuryaKumarYadavT20WorldCup
Advertisement
Next Article