Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியா- ஆஸி. 2வது டி20 போட்டி : டாஸ் வென்று ஆஸி. அணி பந்து வீச்சு தேர்வு.!

07:37 PM Nov 26, 2023 IST | Web Editor
Advertisement

டி20 போட்டியின் இரண்டாவது ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

Advertisement

உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதி போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியுடன் உள்ள கிரிக்கெட் தொடருக்கு சூர்ய குமார் யாதவ் தலைமையில் டி20 அணியை அறிவித்தது இந்திய அணி.  இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை பெற்றது.

இதனைத் தொடர்ந்து விசாகபட்டிணத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் சூர்ய குமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டத்தால் த்ரில் வெற்றி பெற்றது.

டி20 போட்டியின் இரண்டாவது ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.  இந்திய அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய ஜெய்ஷ்வால் மற்றும் கெய்க்வாட் ஜோடி அதிரடியாக ஆடிய நிலையில் ஜெய்ஷ்வால் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 6ஓவர்களின் முடிவில் இந்திய அணி 77 ரன்களை குவித்துள்ளது.

Advertisement
Next Article