Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் - வெளியான செயற்கைக்கோள் படங்கள்!

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
12:56 PM May 08, 2025 IST | Web Editor
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
Advertisement

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

Advertisement

இதனால், இரு நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கிடையே, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இந்த சூழலை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வந்தன. அதேவேளை, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பலரும் தெரிவித்திருந்தனர்.

இந்த சூழிலில், நேற்று நள்ளிரவு 1.44 மணியளவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்ததாகவும், 46 பேர் காயமடைந்ததாகவும் அந்நாடு தெரிவித்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் பஹவல்பூரில் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையால் சேதமான கட்டிடங்களின் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.

Tags :
"Operation SindoorIndiaIndian Air ForceIndian Armynews7 tamilNews7 Tamil Updatespakistan
Advertisement
Next Article