Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#IndependenceDay - செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

07:03 AM Aug 15, 2024 IST | Web Editor
Advertisement

78வது சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி உரையாற்ற உள்ளார்.

Advertisement

நாடு முழுவதும் 78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் இன்று (ஆக. 15) தேசியக்கொடி ஏற்றி, உரையாற்ற இருக்கிறார். இவ்விழாவில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், பழங்குடியினர், பெண்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட மத்திய அரசின் நலத் திட்டங்களால் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் சுமார் 6,000 பேர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன், மத்திய அரசு சார்பில் இணையவழியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற 3,000 பேரும், பல்வேறு மாநிலங்களில் இருந்து பாரம்பரிய உடையில் சுமார் 2,000 பேரும் கலந்துகொள்கின்றனர்.

இதில் 23 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த விழாவையொட்டி, டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பிரதமரின் சுதந்திர தின உரையில் மத்திய அரசின் செயல்திட்டம் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு 17 முறையும், இந்திரா காந்தி 16 முறையும் சுதந்திர தினத்தில் தேசியக் கொடி ஏற்றியுள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடர்ந்து 10 முறை தேசியக் கொடி ஏற்றியவர் என்ற பெருமைக்குரியவர். அந்த வரிசையில் தற்போது பிரதமர் மோடியும் இடம் பெற்றுள்ளார்.

Tags :
Independence DayNarendra modiprime ministerRed Fort
Advertisement
Next Article