Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் 22 இடங்களில் சதம் அடித்த வெயில்... மக்கள் கடும் அவதி!

02:41 PM May 02, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில் இன்று மதியம் 1.30 நிலவரப்படி 22 மாவட்டங்களில் 100°F தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது.

Advertisement

நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு தமிழ்நாடு உள்பட நாட்டின் பல இடங்களில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில்,  இந்தியாவில் இன்றைய தினம் பீகார், மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி,  ஜார்க்கண்ட்,  ஒடிசா,  தெலங்கானா,  கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் வெப்ப அலை வீசி உள்ளது . இந்த நிலையில்,  தமிழகத்தில் இன்றும்,  நாளையும் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  திருப்பத்தூர், வேலூர்,  ராணிப்பேட்டை,  விழுப்புரம்,  கள்ளக்குறிச்சி,  திருவண்ணாமலை,  காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி,  தருமபுரி,  சேலம்,  நாமக்கல்,  கரூர்,  ஈரோடு,  நீலகிரி,  கோவை,  திருப்பூர், திருச்சி,  அரியலூர்,  பெரம்பலூரில் 110 டிகிரி பாரன்ஹீட் வரை ஒட்டி வெயில் பதிவாகலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த 19 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில் இன்று மதியம் 1.30 நிலவரப்படி 22 மாவட்டங்களில் 100°F தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது.

அந்த வகையில் பதிவான வெப்பநிலை வருமாறு...

Tags :
#ClimateHeatheat wavesummertamil nadu
Advertisement
Next Article