Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கு - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ சரணடைவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி ஆகியோருக்கு சரணடைய ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்
06:35 AM Apr 18, 2025 IST | Web Editor
Advertisement

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் சிறை தண்டனை பெற்ற சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா சரணடைவதற்கான காலத்தை மேலும் ஒரு மாதம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கடந்த 1997 - 2000ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக 1.55 கோடி பணம் பெற்றதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்தது கடந்த 2011ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதேபோல, இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு துணையாக செயல்பட்ட ஹைதர் அலிக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கும் 2017ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாக ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.

அதேவேளையில், இந்த தண்டனையை எதிர்த்து மனுதாரர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக ஒரு மாத காலத்துக்கு தண்டனையை நிறுத்தி வைத்தும் கடந்த மார்ச் 14ம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில் ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் சரணடைய விதித்திருந்த காலக்கெடுவும் முடிவடைந்தது.

இதடைதொடர்ந்து தாங்கள் சரண்டைவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என ஒரு இடையீட்டு மனுவை ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்கள். அந்த மனுவானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கோட்டீஸ்வர் சிங் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

அப்போது மனுதாரர்கள் தரப்பில், மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் வரை சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி ஆகியோர் சரணடைய ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்

Tags :
மேல்முறையீடுமனிதநேய மக்கள் கட்சிஉச்ச நீதிமன்றம்ஜவாஹிருல்லாசென்னை உயர் நீதிமன்றம்சிறை தண்டனைசிபிஐ வழக்குசட்டமன்ற உறுப்பினர்சட்டவிரோத பணம்
Advertisement
Next Article