Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"சச்சினை ‘சார்’ என்று தான் அழைப்பேன்" - முன்னாள் பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் நெகிழ்ச்சி!

09:19 AM Sep 08, 2024 IST | Web Editor
Advertisement

பாகிஸ்தான் முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் சயீத் அஜ்மல், சச்சின் டெண்டுல்கர் மீதான தன் மரியாதையையும், அவர் கிரிக்கெட் மீதான தன் அபிமானத்தையும் நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

ஷார்ஜாவில் குளோ ஃபேன்ஸ் ஹை ஸ்கூல் கிரிக்கெட் கோப்பை அறிமுகத்தின் போது சயீத் அஜ்மல் கூறியதாவது,

"சச்சின் ஒரு கிரேட் கிரிக்கெட் வீரர். உலகிலேயே நேர்மையானவர் அன்பானவர். அவர் ஒரு லெஜண்ட். நான் அவரை சார் என்றுதான் அழைப்பேன். நான் அவருடன் சேர்ந்து ஆடியது எனக்கு உயரிய கவுரவமாகும். இத்தகு மரியாதைக்கும் புகழுக்கும் அவர் உரித்தானவரே. கிரிக்கெட்டில் ‘சச்சின் சார்’ போன்ற வேறொருவர் இல்லை. அவரை நான் அவுட் செய்திருக்கிறேன். அது எனக்கு பெருமை வாய்ந்த மகிழ்ச்சித் தருணம். நான் அவருக்கு எதிராக ஆடும்போதெல்லாம், மனிதார்த்த உணர்வுடன் அவர் மீது மிக்க மரியாதையுடன் தான் விளையாடுவேன்.

சச்சினுடன் 2010-ல் லீக் ஒன்றில் ஆடினேன். தூஸ்ரா வீசி பீட்டர்சனை ஆட்டமிழக்கச் செய் என்று என்னிடம் சச்சின் கூறினார். நானும் தூஸ்ராவில் பீட்டர்சனை வீழ்த்தினேன். அவருக்கு மகிழ்ச்சித் தாளவில்லை. 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினேன். போட்டியில் இன்னும் 6 விக்கெட்டுகள் இருந்தன. அப்போது சச்சின் என்னிடம் சீக்கிரம் முடித்து விட வேண்டாம் என்றார். சச்சினுக்கு எப்போதுமே எங்கள் மீது மரியாதை உண்டு. அவரைப் போன்ற ஒரு நல்ல மனிதரைப் பார்ப்பது அபூர்வம்.

இவ்வாறு கூறினார் சயீத் அஜ்மல்.

Tags :
cricketerIndiaNews7TamilpakistanSachin TendulkarSaeed Ajmal
Advertisement
Next Article