Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"#TirupatiLadduல் கலப்படம் செய்திருந்தால் எனது குடும்பம் நாசமாகட்டும்" - கற்பூரம் ஏற்றி சபதம் செய்த கருணாகர் ரெட்டி!

09:42 PM Sep 23, 2024 IST | Web Editor
Advertisement

திருப்பதி லட்டுவில் கலப்படம் செய்திருந்தால் நானும் எனது குடும்பமும் நாசமாகட்டும் என முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி சபதம் ஏற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார்.

லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு , பாமாயில் எண்ணெய் உள்ளிட்டவை கலந்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து சேனா தலைவரான சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை வழங்கியதன் மூலம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்து மதத்தை அவமதித்திருப்பதாகவும், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியிருப்பதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார். மேலும் லட்டு பிரசாதம் தயாரிப்பதில் விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு இந்து சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி உள்ளது. இந்துக்களின் உணர்வுகள் மற்றும் மத உணர்வுகளை கொந்தளிக்க செய்துள்ளது என்றும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக கூறி திருப்பதி திருமலா கோயிலுக்கு சாந்தி ஹோம பூஜைகள் நடத்தப்பட்டு, கோமியம் தெளிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. திருப்பதி லட்டு தயாரிப்பிற்கு தயாரிக்கப்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த சம்பந்தப்பட்ட நெய் நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி திடீரென கோயில் குளத்திற்கு வந்து மூழ்கி, ஈர உடையுடன் மக்கள் முன்னிலையில் கற்பூரம் ஏந்தி சபதம் ஏற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழுமலையானே உனது நைவேத்தியம், சர்வதேச புகழ்பெற்ற லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்திருந்தால் நானும், என்னுடைய குடும்பமும் சர்வ நாசமாக போக வேண்டும், என்று உணர்ச்சியுடன் சபதம் ஏற்றார்.

இதனைத் தொடர்ந்து ஏழுமலையான் கோயில் எதிரில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்த கருணாகர ரெட்டியை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஜெகன் மோகன் ஆட்சி மற்றும் அவரது தந்தை ராஜசேகர ரெட்டி ஆட்சிகளில் கருணாகர ரெட்டி இரண்டு முறை அறங்காவலர் குழு தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Karunakara ReddyLadduTirupatiTirupati Laddu
Advertisement
Next Article