Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘ஒயிட் ரோஸ்’ படத்திற்காகத்தான் ரூசோவிடம் பணம் வாங்கினேன்.! - நடிகர் ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம்

10:00 AM Dec 13, 2023 IST | Jeni
Advertisement

நடிகர் ஆர்.கே. சுரேஷ்  “ஒயிட் ரோஸ்” என்ற படத்திற்காகத்தான், ஆருத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தயாரிப்பாளர் ரூசோவிடம் பணம் பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேற்று அசோக் நகரில் உள்ள மாநில பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த வழக்கில் ஏற்கனவே கைதான ரூசோவிடம் இருந்து ரூ.15 கோடியை பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து இன்றும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

இதனிடையே நடிகர் ஆர்.கே. சுரேஷ்  “ஒயிட் ரோஸ்” என்ற படத்திற்காகத்தான், ஆருத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தயாரிப்பாளர் ரூசோவிடம் பணம் பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ரூசோவிடமிருந்து ரொக்கமாகவும் கோடிக்கணக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பணம் பெற்று இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. ரூசோவிடமிருந்து பெறப்பட்ட பணத்தை திரைப்படத்திற்கு மட்டுமல்லாமல் சொந்த செலவிற்கும், கட்சி நிகழ்ச்சிக்கும் ஆர்.கே.சுரேஷ் செலவழித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள் : மிகவும் மோசமான நிலையில் டெல்லி - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!

துபாயில் கைது செய்யப்பட்டுள்ள ஆருத்ரா நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜசேகரை, நடிகர் ஆர்.கே.சுரேஷ் துபாயில் சந்தித்தாரா என்பது குறித்து எல்லாம் நேற்று ஆர்.கே.சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். தயாரிப்பாளர் ரூசோவிற்கும் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கும் இடையே உள்ள சினிமா பட ஒப்பந்தம் குறித்து ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணைக்கு எடுத்து வரச் சொல்லி உள்ளனர்.  நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை வரும் 18-ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.

Tags :
aarudhracaseconfessionRKSureshscam
Advertisement
Next Article