"ரொம்ப வருத்தமா இருக்கு..” - அகமதாபாத் விமான விபத்து குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் சில நிமிடங்களிலேயே பிஜே மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் விழுந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்தனர். இதில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் ஒருவர். அதே சமயம், விமான விபத்தில் விடுதியில் இருந்த 29 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒருவர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார். இதன்மூலம், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்தது.
இதையும் படியுங்கள் : Gold Rate Today | அதிரடியாக குறைந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு?
இதனிடையே, விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் உடல்களை அடையாளம் காண விமான உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பரிசோதனைக்கு பிறகு 76 பேரின் உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மற்றவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம் இந்த விபத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ரொம்ப வருத்தமான விஷயம். ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு. ருளால் இனி இதுபோன்ற விபத்துகள் நடக்காம இருக்கணும்" என்றார். தொடர்ந்து, ஜெயிலர் 2 குறித்து அப்டேட் கேட்டதற்கு தற்போது அதன் படப்பிடிப்புக்காதத்தான் சென்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.