Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Hosur | நடுரோட்டில் வைத்து மாணவியை கொடூரமாகத் தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் அதிரடி கைது!!

07:37 PM Oct 28, 2024 IST | Web Editor
Advertisement

ஓசூரில், தனியார் பள்ளி மாணவியை அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தாக்கிய வீடியோ, வெளியான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் புனித ஜான் பாஸ்கோ மகளிர் மேல்நிலைப் பள்ளியின் சார்பில், பாகலூர் சாலையில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான யோகி வேமண்ணா பள்ளியில் கடந்த 23 ஆம் தேதி மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் நடந்துள்ளன. இதில், ஓசூரைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவிகள் பங்கு பெற்றுள்ளனர்.

அப்போது, தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர், தனது கைக்கடிகாரத்தை பள்ளி மாணவி ஒருவர் திருடியதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மாணவியையும், அவரது பயிற்சியாளரையும் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பயிற்சியாளர், சம்பந்தப்பட்ட மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளார். மேலும், அந்த மாணவியை பொதுவெளியிலேயே சரமாரியாக தாக்கியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மைதானத்தில் கீழே கிடந்த கைக்கடிகாரத்தை மாணவி எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பள்ளி மாணவியை தாக்கிய புகாரில் வாலிபால் பயிற்சியாளர் தியாகராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். வாலிபால் பயிற்சியாளர் தியாகராஜன் ஏற்கனவே பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article