Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையை புரட்டிப் போட்ட கனமழை | களத்தில் நியூஸ்7 தமிழ்...

05:19 PM Dec 06, 2023 IST | Web Editor
Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த ஞாயிறு முதல் பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.  இது குறித்து  வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் தொடர்ந்து களத் தகவல்களை அளித்து வருகின்றனர்.

Advertisement

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழகத்தில் குறிப்பாக சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் எதிர்பாராத தொடர் கனமழையால் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  தொடரந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மழை நின்று 2 நாட்கள் ஆகியும் சென்னை அரும்பாக்கம் - கோயம்பேடு பிரதான சாலையில் மழை நீர் இன்னும் வடியவில்லை.  இது குறித்து நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் வழங்கிய கூடுதல் தகவலின் காணொலி:

செங்கல்பட்டு மாவட்டம் மகாலட்சுமி நகர் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் மழை நீர் சூழ்ந்து தனித்தீவாக காட்சியளிக்கிறது.
இது குறித்த கூடுதல் தகவல்களை நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் சாலமன் வழங்கியனார். அதன் காணொளி:

 

சென்னை வேளச்சேரி விஜயா நகர்,  டான்சி நகர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.  இது குறித்து களத்தில் இருந்தபடி நமது செய்தியாளர் ரேவதி தொடர்ந்து தகவல்களை வழங்கினார்.  அது தொடர்பான காணொலி:

சென்னை வேளச்சேரியில் மழை நின்றும்,  சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீர் வடியாததால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.  ஏராளமான கார்கள் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  அதன் பருந்து பார்வை காட்சிக்கான காணொலி:

 

 

 

 

Advertisement
Next Article