Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நீலகிரியில் கனமழை | கூடலூர்,பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

07:26 AM Jun 27, 2024 IST | Web Editor
Advertisement

தொடர் கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.

Advertisement

நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.  தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதோடு தமிழ்நாடு, புதுச்சேரியில், ஜூலை 2ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் பெய்யத் தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. இதில் கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை இரவு முழுவதும் கனமழை பெய்தது.

இதையும் படியுங்கள் : கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் | இபிஎஸ் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு!

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் அதிகாலை முதல் கனமழை பெய்தது. அதிகபட்சமாக தேவாலாவில் 186 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்தார். கனமழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்திருந்த நிலையில், இரண்டாம் நாளாக இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
BandalurCoimbatoreheavy rainsholidayKudalurNilgirisSchoolTN Rain
Advertisement
Next Article