Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

06:05 PM May 23, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் தணிந்து, கோடை மழை பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகின்றது. இதனிடையே வடதமிழக - தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுபகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இந்த நிலையில் நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதோடு, நாளை(மே 24) திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதனிடையே, வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக வலுப்பெற்று வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Tags :
Heavy rainMeteorological CentreRainWeather
Advertisement
Next Article