Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கனமழை எதிரொலி | 100 அடியை எட்டும் மேட்டூர் அணை!

09:47 PM Jul 26, 2024 IST | Web Editor
Advertisement

காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நாளை 100 அடியை எட்டும் என எதிர்பாக்கப்படுகிறது.

Advertisement

கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், மீண்டும் சரிய தொடங்கியது. தற்போது, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால், அங்குள்ள அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வெள்ளிக்கிழமை காலை விநாடிக்கு நீர்வரத்து 45,598 கன அடியாகவும், மதியம் 58,973 கன அடியாகவும் இருந்தது.

தொடர்ந்து, நீரின் அளவு அதிகரித்து, இன்று மாலை விநாடிக்கு நீர்வரத்து 68,032 கன அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் மட்டுமே நீர் வெளியேற்றப்படுகிறது. இதனிடையே, அதிகரித்து காணப்படும் நீர்வரத்தினால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 92.62 அடியாக இருந்த நீர் மட்டம், மாலையில் 94.23 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 55.69 டிஎம்சியில் இருந்து 57.62 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து இருக்கும் நிலையில், பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வள ஆணையம், தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியதும், டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags :
Cauvery Water DisputehogenakkalMettur dam
Advertisement
Next Article