Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் மே 1 வரை வெப்ப அலை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்!

10:16 AM Apr 29, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் மே 1 ஆம் தேதி வரை வெப்ப அலை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாட்டில் தமிழகம்,  மேற்குவங்கம்,  பீகார்,  ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும்,  மிக மோசமான வெப்ப அளவே நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,  நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிக மோசமான வெப்ப நிலை நீடிக்கும்.

மேற்கு வங்கம்,  ஒடிசா,  பீகார்,  ஜார்க்கண்டில் ஒரு சில பகுதிகளில் மே 1ஆம் தேதி வரை கடுமையான வெப்பம் நிலவக்கூடும் என்றும்,  அதன்பிறகு, மே 2ஆம் தேதி வரை ஒரு சில பகுதிகளில் மோசமானது முதல் மிக மோசமான வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழகம்,  புதுசசேரி,  உள் கர்நாடகம்,  கோவா, ராயலசீமா,  ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  தெலங்கானாவில் இன்று முதல் மே 1ஆம் தேதி வரையும், கேரளத்தின் கொங்கன் பகுதிகளில் இன்றும் வெப்ப அலை வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Heat wave alerttamil nadu weather report. Heat wave 2024WeatherWeather Update
Advertisement
Next Article