Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்” - பிரதமர் மோடி பதிவு!

09:25 AM Nov 12, 2023 IST | Web Editor
Advertisement

தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகுவிமரிசையாக, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியையொட்டி மக்கள் அனைவரும் புதிய ஆடைகளை அணிந்தும், பலகாரங்களை உண்டும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். தீபாவளியையொட்டி அனைத்து இந்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தனது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நாட்டில் உள்ள எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்." என ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்.

மேலும், “அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! இந்த சிறப்பு பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அற்புதமான ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்." என பதிவிட்டுள்ளார்.

Advertisement
Next Article