Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரையாண்டுத் தேர்வுகள் எப்போது? பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

09:10 AM Nov 20, 2023 IST | Web Editor
Advertisement

தமிழகத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7 முதல் டிசம்பர் 22 வரை தேர்வு நடைபெற உள்ளது. 6 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 11 முதல் டிசம்பர் 21 வரை தேர்வு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அரையாண்டு தேர்வு முடிவடைந்து எத்தனை நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை என்பது குறித்து அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி இரண்டாம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பத்து நாட்களும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 11 நாட்களும் காலாண்டு விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisement
Next Article