Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குஜராத் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம்! - ஏன் தெரியுமா?

05:26 PM Mar 27, 2024 IST | Web Editor
Advertisement

குஜராத் டைட்டனஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம்  ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது.

Advertisement

17-வது ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டம், மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அதன்பின் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெற்ற நிலையில், சிஎஸ்கேவின் 2-வது போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மார்ச் 26) நடைபெற்றது.

இதையும்  படியுங்கள் : ஓபிஎஸ் Vs “5 ஓபிஎஸ்” | ராமநாதபுரம் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் போட்டி!

சென்னை சேப்பாக்கத்தில் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது.  சிஎஸ்கே அணியின் ரவீந்திர ஜடேஜா 46 ரன்களும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 207 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 63 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் குறித்த நேரத்தில் பந்து வீசாமல் தாமதப்படுத்தியதாக குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennaichennaisuperkingsCskCSKvsGTGTGujarat captaingujarattitansIPLIPL2024Subman Gill
Advertisement
Next Article