Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாளை நடைபெறுகிறது குரூப் 1 முதல்நிலைத் தேர்வு!

09:23 PM Jul 12, 2024 IST | Web Editor
Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது.

Advertisement

தமிழ்நாடு முழுவதும் 797 மையங்களில் குரூப் 1 தேர்வு நாளை நடைபெறுகிறது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

குரூப் 1 தேர்வு முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வு என நடைபெறும்.  இதில் முதல்நிலை தேர்வு நாளை காலை 9.30 மணி முதல் தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரையில் நடைபெற உள்ளது.  இந்த முதல்நிலை தேர்வை 2.38 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதற்காக சென்னையில் மட்டும் 124 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டியவை:

தேர்வு அறையில் தேர்வு நடைமுறை விதிமுறைகளை தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் முறைகேட்டில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குரூப் 1 தேர்வு நடைபெறுவதால் நாளை  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags :
ExaminationGroup1Group1 Examtamil naduTNPSCTNPSC Group1
Advertisement
Next Article