"வர்த்தக பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம்" - அதிபர் டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி என்ற பெயரில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது இறக்குமதி வரியை உயர்த்தி உத்தரவிட்டார். இதற்கான கடந்த பேரில் 2ம் தேதி வெளியார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பை நிறுத்தி வைத்தார். இதனை தொடர்ந்து அமெரிக்கா - இந்தியா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு வெளியே அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, "வரி தொடர்பாக இந்தியாவுடனான பேச்சுவார்த்தை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல், அமெரிக்க மற்றும் இந்தியா வர்த்தகப் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்.
90 நாள் வரி இடைநிறுத்தத்தின் போது ஆப்பிரிக்காவிற்குச் சென்று ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளேன். அதை அறிவிக்க நாட்டின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறேன்". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.