Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பட்ஜெட் எதிரொலி - ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை!

மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஒரேநாளில் 2-வது முறையாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
05:45 PM Feb 01, 2025 IST | Web Editor
Advertisement

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். 8வது முறையாக இன்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

Advertisement

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலுக்கு பிறகு கிடுகிடுவென மீண்டும் உயர்ந்தது. வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இன்று காலை ஒரு சவரன் ரூ. 61,960 க்கு விற்பனையாகி வந்த நிலையில், நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு பின்னர், சவரன் ஒன்றுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.62,320 ஆக விற்பனையாகிறது. காலையில் சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில், தற்போது ரூ.360 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 107-க்கும், ஒரு கிலோ ரூ. 1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
மத்திய பட்ஜெட்பட்ஜெட் 2025Budget 2025Finance MinisterGoldGold rateNirmala sitharamanparliamentprice hikeunion budgetUnionBudget 2025
Advertisement
Next Article