"காசா மூச்சுத் திணறுகிறது, உலகம் விலகி நின்று பார்க்கக்கூடாது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "காசா மூச்சுத் திணறுகிறது, உலகம் விலகி நின்று பார்க்கக்கூடாது. காசாவில் நடக்கும் சம்பவங்களால், வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
குழந்தைகளின் அழுகை, பட்டினி கிடக்கும் குழந்தைகளின் காட்சி, மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு, ஐ.நா.விசாரணை ஆணையத்தின் இனப்படுகொலை அறிவிப்பு ஆகியவை எந்த மனிதனும் ஒருபோதும் பாதிக்கப்படக்கூடாத துன்பத்தைக் காட்டுகின்றன.
அப்பாவி உயிர்கள் இப்படி நசுக்கப்படும்போது, மவுனமாக இருப்பது சரியல்ல. ஒவ்வொரு மனசாட்சியும் எழ வேண்டும். இந்தியா உறுதியாகப் பேச வேண்டும், உலகம் ஒன்றுபட வேண்டும். இந்த பயங்கரத்தை இப்போதே முடிவுக்குக் கொண்டுவர நாம் அனைவரும் செயல்பட வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.