Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மீலாடி நபியை முன்னிட்டு மத நல்லிணக்க கந்தூரி விழா: 15,000 பேருக்கு அன்னதானம்!

01:36 PM Nov 25, 2023 IST | Web Editor
Advertisement

மீலாடி நபியை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் திண்டுக்கல்லில் மும்மதத்தை சேர்ந்த 15,000 பேருக்கு உணவு வழங்கிய மாபெரும் கந்தூரி  விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Advertisement

மீலாடி நபியை முன்னிட்டு இல்லாதோருக்கு ஒரு வேளை உணவாவது வழங்கிட வேண்டும் என்பதற்காக  திண்டுக்கல் கரீபுன் நிவாஸ் நினைவாக ஐந்தாம் ஆண்டு மாபெரும் கந்தூரி விழா தனியார் திருமண மண்டபத்தின் வெகு விமரிசையாக நடைபெற்றது.


1500 கி அரிசி,  தக்காளி,  வெங்காயம் மற்றும் பல்வேறு மளிகை பொருட்கள் கலந்து 30க்கும் மேற்பட்ட ராட்சத அடுப்புகள் மூலம் பெரிய பாத்திரங்களை கொண்டு நெய் சாதம், கேசரி மற்றும் தால்சா தயார் செய்து திண்டுக்கல் பேகம்பூர், பூச்சி நாயக்கன்பட்டி,  ஹசநாத்புரம், மா.மு.பள்ளிவாசல்,  யூசுபியா நகர் மற்றும் பிஸ்மி நகர் பகுதிகளைச் சேர்ந்த அனைத்து சமுதாயத்தை சேர்ந்த 15,000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து நெய் சாதம் பெற்றுச் சென்றனர்.

Advertisement
Next Article