Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

செரலாக்கில் கூடுதல் சர்க்கரை - ஆய்வுக்கான பணிகளை தொடங்கியதாக FSSAI தகவல்!

10:52 AM Apr 26, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் விற்கப்படும் குழந்தைகளுக்கான செரலாக் மற்றும் நிடோவில்  கூடுதல் சர்க்கரை சேர்க்கபடுவதாக எழுந்த புகாரையடுத்து,  இதுதொடர்பாக பரிசீலிப்பதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. 

Advertisement

சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுயாதீன ஆய்வு நிறுவனமான 'பப்ளிக் ஐ' மற்றும் சர்வதேச குழந்தைகள் உணவு நடவடிக்கை நெட்வொர்க் `IBFAN’ சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, ஏழை நாடுகளில் விற்கப்படும் நெஸ்லேயின் செரலாக் மற்றும் நிடோவில் (பால் பவுடர்) கூடுதல் சர்க்கரை சேர்க்க படுவதாகவும், சில சமயங்களில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் குழந்தை உணவுப் பொருட்களிலும், நெஸ்லே 2.7 கிராம் சர்க்கரை சேர்ப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்படும் நெஸ்லே 12-36 மாத குழந்தைகளுக்கான குழந்தை உணவுப் பொருட்களில் சர்க்கரை சேர்க்கப்படவில்லை. இந்த அறிக்கை இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR), இதுகுறித்து ஆய்வு நடத்துமாறு  FSSAI-க்கு வேண்டுகோள் விடுத்தது.

இதனையடுத்து இதுகுறித்த ஆய்வுக்கான மாதிரிகளை சேகரித்து வருவதாக FSSAI தெரிவித்துள்ளது. எப்எஸ்எஸ்ஏஐ-ன் தலைவர் கமல் வர்தன ராவ் கூறியிருப்பதாவது;

செரலாக் உணவில் கூடுதல் சர்க்கரை இடுபொருள் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக, தேசிய அளவில் மாதிரிகளை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி நிறைவடைய 15 முதல் 20 நாள்கள் ஆகும்” என தெரிவித்துள்ளார்.

Tags :
CeralacFSSAIIBFANKids FoodNCPCRNestleNido
Advertisement
Next Article