"இன்றிலிருந்து இளைய காமராஜர்".. மாணவரின் தந்தை சொன்ன வார்த்தை - ஜர்க் ஆகி விஜய் கொடுத்த ரியாக்ஷன்!
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊக்கத்தொகை வழங்கி வந்தார். அந்த வகையில் இந்தாண்டு முதற்கட்டமாக 88 தொகுதிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கல்வி விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்து மாணவ மாணவியருக்கு விஜய் ஊக்கத்தொகை வழங்கி வருகிறார்.
இதையும் படியுங்கள் : வைகோ சகோதரி மறைவு | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
ஊக்கத்தொகை பெற்ற மாணவ - மாணவிகளும், அவரது பெற்றோர்களும் மேடையில் விஜயை பாராட்டி பேசி வருகின்றனர். அந்த வகையில், ஊக்கத்தொகை பெற்ற ஒரு மாணவரின் தந்தை பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாணவரின் பெற்றோர் விஜய் குறித்து பேசுகையில், "கல்விக்கு இவ்வளவு பெரிய தொண்டு செய்வதால், இன்றிலிருந்து விஜய் 'இளைய காமராஜர்' என்று அழைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அடுத்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பரிசு வழங்க வேண்டும் என ஆசைபடுகின்றேன். அதனை நீங்கள் அனைவரும் நிறைவேற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்" என தெரிவித்தார். அதற்கு தவெக தலைவர் விஜய் ஷாக் ஆகி மாணவரின் தந்தையின் தோளில் கைது வைத்தவாறு சிரித்தார். இது தொடர்பான காணொலியை விஜயின் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.