பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் | சாம்பியன் பட்டம் வென்றார் கார்லோஸ் அல்காரஸ்!
பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டி நேற்றிரவு (ஜுன் 8) நடந்தது. இந்த போட்டியில், ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் அல்காரஸ் (வயது 22) மற்றும் இத்தாலி நாட்டின் ஜானிக் சின்னர் (வயது 23) ஆகியோர் விளையாடினர். இந்த போட்டியில், தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய சின்னர் 2 செட்களை கைப்பற்றினார்.
இதையும் படியுங்கள் : மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை… இணைய சேவை துண்டிப்பு!
இதனையடுத்து, அதிரடி காட்டிய அல்காரஸ் அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து, 5வது செட்டை நோக்கி ஆட்டம் சென்றது. அதில், இருவரும் வெற்றி பெற தீவிரம் காட்டினர். இறுதியில், 4-6, 6-7 (4), 6-4, 7-6 (3), 7-6 (10-2) என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி, கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் இறுதி போட்டியில் சின்னர் தோல்வி அடைவது இதுவே முதன்முறையாகும். இந்த போட்டி 5 மணி நேரம் 29 நிமிடங்கள் நடைபெற்றது. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் வரலாற்றில் இதுவே நீண்ட நேரம் நடைபெற்ற இறுதி போட்டியாகும்.