Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜார்க்கண்டில் சரக்கு ரயில் விபத்து - ரயில் சேவை பாதிப்பு!

இரண்டு சரக்கு ரயில்களின் 20க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டன.
07:12 PM Aug 09, 2025 IST | Web Editor
இரண்டு சரக்கு ரயில்களின் 20க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டன.
Advertisement

 

Advertisement

ஜார்க்கண்ட் மாநிலம், செரைகேலா-கார்ஸ்வான் மாவட்டத்தில் உள்ள சாண்டில் ரயில் நிலையம் அருகே இரண்டு சரக்கு ரயில்களின் 20க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து காரணமாக, சாண்டில்-டாடாநகர் இடையிலான ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தென்கிழக்கு ரயில்வேயின் அத்ரா பிரிவுக்கு உட்பட்ட சாண்டில் மற்றும் நிம்திஹ் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நடந்தது. சனிக்கிழமை அதிகாலை 2:45 மணியளவில், ஒரு சரக்கு ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு, எதிரே வந்த மற்றொரு ரயிலின் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர்கள் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அதிர்ஷ்டவசமாக, பெரிய அளவிலான உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து ஒரு பயணிகள் ரயிலுக்கு ஏற்பட்டிருந்தால், அதன் விளைவுகள் மிக மோசமாக இருந்திருக்கும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியும், சேதமடைந்த தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பிரிவில் இயங்கும் விரைவு ரயில்கள், மெயில் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. ரயில் சேவையை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :
freighttrainJharkhandRailSafetySeraikelaTrainAccident
Advertisement
Next Article