Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Formula4 கார் பந்தயம் | 3வது சுற்று சென்னைக்கு மாற்றம் - தேதிகள் அறிவிப்பு!

06:45 AM Sep 11, 2024 IST | Web Editor
Advertisement

ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் அடுத்த பகுதியாக, 3வது சுற்று, சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் வரும் செப். 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே கடந்த ஆக. 31 மற்றும் செப். 1 சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிமீ தூரத்திற்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது.

3.7 கி.மீ. தொலைவு கொண்ட பார்முலா 4 கார் பந்தய சர்க்யூட், தீவுத்திடலில் தொடங்கி, போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம் , சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை ஆகியவற்றின் வழியே மீண்டும் தீவுத்திடலில் நிறைவுபெற்றது. பயிற்சி போட்டிகளை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் அடுத்த பகுதியாக, 3வது சுற்று, சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் வரும் செப். 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள கரி மோட்டார்ஸ் ஓடுதளத்தில் நடைபெறவிருந்த இந்தியன் ரேசிங் பெஸ்டிவல் கார் பந்தயம், சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Tags :
Car RaceChennaiFormula 4 Car RaceFormula CarIndian Racing LeagueIRLIrungattukottaiKari Motor SpeedwayMadras International CircuitMICNews7TamilTamilNaduUdhayanidhi stalin
Advertisement
Next Article