முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் ஜாமீனில் விடுவிப்பு - திருப்போரூர் நீதிமன்றம் உத்தரவு!
பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு, திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ராஜேஸ் தாஷ் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள பியூலா வெங்கடேசனுக்கு சொந்தமான வீட்டில், ராஜேஷ் தாஸ் அத்துமீறி உள்ளே நுழைய முயன்றதாகவும், நுழைந்தபோது அனுமதிக்காத செக்யூரிட்டியின் செல்போனை பிடுங்கி சென்றதாகவும் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பியூலா ராஜேஷ் புகார் அளித்தார். மேலும் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று ராஜேஷ் தாஸ் தனது வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டாம் என எழுதி கொடுத்ததாகவும் பியூலா வெங்கடேசன் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில நுழைந்தபோது திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. பின்னர் அவரை மீண்டும் அழைத்து வந்து, காவல்துறை வாகனத்திலேயே சற்று நேரம் ஓய்வெடுக்க வைத்து விட்டு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். விசாரணையில், தான் காவலாளியை பார்க்கவில்லை என்றும், இது பொய்யான புகார் என்றும் தெரிவித்தார். இதனை கேட்ட நீதிபதி அனுப்பிரியா அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.