Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“யாருக்காக திருத்தம் கேட்கிறீர்கள்?” - கீழடி அகழாய்வு அறிக்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி!

யாருக்காக திருத்தம் கேட்கிறீர்கள்? என கீழடி அகழாய்வு அறிக்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
05:07 PM May 29, 2025 IST | Web Editor
யாருக்காக திருத்தம் கேட்கிறீர்கள்? என கீழடி அகழாய்வு அறிக்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement

கீழடி அகழாய்வு அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில்,  மத்திய அரசு விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டது. அதில்  அகழ்வாராய்ச்சியாளர்களால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அவை பல்வேறு துறை நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள் அகழ்வாராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக வெளியீட்டிற்காக மீண்டும் சமர்ப்பிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

Advertisement

மேலும் இதே நடைமுறை கீழடி அறிக்கையில் பின்பற்றப்பட்டதாகவும் அகழ்வாராய்ச்சியாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான நிபுணர்களின் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு திருத்தங்கள் தற்போதுவரை  மேற்கொள்ளப்படவில்லை என கலாசாரத்துறை அமைச்சகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில்  மத்திய அரசின் விளக்கம் குறித்து யாருக்காக திருத்தம் கேட்கிறீகள்? என மதுரை நாடளுமன்ற உறிப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வரலாறென்பது விஸ்வகுருவின் வீட்டுச்சரக்கல்ல.! “திருத்தம் கேட்பது வழக்கமான ஒன்று தான்” என்று மத்திய அரசு சொல்கிறது. நீங்கள் கேட்கிற திருத்தத்தைச் செய்ய முடியாது என்று அகழாய்வு நடத்தியவர் தெரிவித்துவிட்டார். பின்னர் யாரிடம் திருத்தம் கேட்கிறீர்கள்? யாருக்காக கேட்கிறீர்கள்? அறிவியல் கண்டுபிடிப்புகளை உங்கள் அதிகாரத்தின் மூலம் திருத்த முடியாது” என்று கூறியுள்ளார்.

Tags :
CentralGovtexcavation reportKeezhadiS Venkatesan MP
Advertisement
Next Article