Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு!

07:26 AM Aug 12, 2024 IST | Web Editor
Advertisement

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் குறைந்ததால் கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டது. அதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 8,000 கன அடியாக குறைந்தது.

கர்நாடகா, கேரளா மாநிலங்களின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து மீண்டும் காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த 9ம் தேதி மாலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு 8,000 கன அடியாக இருந்த நீர்வரத்து அடுத்த நாள் காலை 19,000 கன அடியாகவும், மாலை விநாடிக்கு 22,000 கன அடியாகவும் அதிகரித்தது.

இதையும் படியுங்கள் : தேர்வில் தோல்வி – தங்கையை சுட்டுக்கொன்ற அண்ணன்!

இந்நிலையில் நேற்று மாலை 24,000 கன அடியில் இருந்து நீர்வரத்து 30,000 கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான, அஞ்செட்டி, கேரெட்டி, பிலிகுண்டு, ஒகேனக்கல் வனப்பகுதி, நாட்ற பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருவதாலும், கர்நாடகா அணைகளில் இருந்து  நீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் இந்த நீர்வரத்து உயர்ந்துள்ளது. இதற்கிடையே, கடந்த 27 நாட்களாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை தொடர்கிறது.

Tags :
CauveryDharmapurihogenakkalrainfallriverWaterLevel
Advertisement
Next Article