Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு | 31 பேர் பலி...

08:52 AM Nov 14, 2023 IST | Web Editor
Advertisement

 சோமாலியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவரும் நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

Advertisement

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா உலகின் மிகவும் வறட்சியான மற்றும் ஏழை நாடுகளில் ஒன்றாகும். வறட்சி காரணமாக உணவுப் பொருட்கள் கிடைக்காமல் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சோமாலியாவில் மழை பெய்ய துவங்கியது. இடைவிடாமல் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல் தொடர்புத்துறை அமைச்சர் தாவூத் ஆவிஸ் தெரிவித்துள்ளார்.

தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை அடுத்து 5 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும், 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பல்வேறு வகையிலும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சோமாலியாவின் கெட்டோ பகுதியில் மழை வெள்ள பாதிப்பு மிகவும் அதிக அளவில் உள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐநா அலுவலகம், மழை வெள்ளத்தை சமாளிக்க முடியுமே தவிர தடுக்க முடியாது என கூறியுள்ளது. வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக சோமாலியாவுக்கு இந்திய மதிப்பில் 208 கோடி ரூபாயை ஐநா வழங்கியுள்ளது.

சோமாலியாவுக்கு அருகே உள்ள கென்யாவும் தொடர்மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக ரெட் கிராஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மழை வெள்ளத்தை சேமித்து வைக்க போதிய அணைகள் இல்லாததும், உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததுமே இந்த மழை பாதிப்புகளுக்கு காரணம் என கூறப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், பாதிப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Advertisement
Next Article