Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருவிழாக்கோலம் பூண்ட பாரீஸ் - கண்கவர் நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக தொடங்கியது ஒலிம்பிக்ஸ் போட்டி!

06:56 AM Jul 27, 2024 IST | Web Editor
Advertisement

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியின் துவக்க விழா பாரீஸில் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.

Advertisement

சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும்.  4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள்  ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது.

 முன்னதாக ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான தொடர் ஜோதி ஓட்டம் தொடங்கியது. ஒலிம்பிக்ஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் கிரீஸில் இருந்து சுமார் 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி ஓட்டம், தற்போது இறுதிக்கட்டமாக பாரீஸ் நகரங்களில் வலம் வருகிறது. இந்த ஒலிம்பிக் ஜோதி நேற்று நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் இணைந்து அந்த ஜோதி ஓட்டம் நிறைவுபெற்றது. இதனைத் தொடர்ந்து  பிரம்மாண்ட தீபத்தை ஏற்றப்பட்டதை தொடர்ந்து போட்டி நடைபெறும் 17 நாள்களும் அந்த பிரம்மாண்ட தீபம் அணையாமல் எரியும்.

பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில்  200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர்,  வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.  இதில் இந்தியாவின் சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொள்கின்றனர். இந்த நிலையில் நேற்று  ஒலிம்பிக்ஸ் போட்டியின் துவக்க விழா கோலாகலமாக தொடங்கியது. பாரீஸில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 11மணி அளவில் துவக்க விழா தொடங்கியது.

ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக, மைதான வளாகத்துக்குள் நிகழ்ச்சிகள் நடைபெறாமல் மைதானத்திற்கு வெளியே நதியில் தொடக்க நிகழ்ச்சிகள் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக  நடைபெற்றன. பாரீஸில் உள்ள  பிரபலமாக அறியப்படும் சென் நதியில் நிகழ்ச்சி நடைபெற்றது. போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிகள் படகு மற்றும் கப்பல்களில் அணிவகுத்தன.

நதியின் இரு பக்கமும் நின்று அதைப் பார்வையிட 3,20,000 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஒலிம்பிக் போட்டியை தொடக்கி வைத்தார்.ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல் ஏந்திச் சென்றனர்.

Tags :
#OlympicsOlympics 2024Parisparis 2024 olympicsParis Olympics 2024Paris Olympics2024Sein River
Advertisement
Next Article