Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : நாதக வேட்பாளர் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாதக சார்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
09:12 AM Jan 14, 2025 IST | Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாதக சார்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளரை அறிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன்படி அக்கட்சியின் சார்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுகிறார். திமுக தரப்பில் வி.சி.சந்திரசேகர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாதக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன.10ஆம் தேதி தொடங்கியது.

பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, தேமுதிக மற்றும் பாஜக தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளன. தற்போது இந்த ரேஸில் திமுக மற்றும் நாதக மட்டுமே உள்ளன. மற்ற அனைவரும் சுயேட்சை வேட்பாளர்களாகவே உள்ளனர்.

Tags :
by electionErode East ConstituencyNTK CandidateSeeman
Advertisement
Next Article